வணக்கம் . இன்று எங்கு பார்த்தாலும் குண்டு வீச்சு . நாடே பரபரப்பான சூழ்நிலையில் இருக்கிறது . முன்பெல்லாம் தீவிரவாதிகளின் ஊடுருவல் அரசாங்கத்தின் கட்டுகோப்பில் இருந்தது. இன்றோ காலையில் பத்து குண்டுகள் மாலையில் பத்து என சரமாரியாக குண்டு மலை பொழிகிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் போலீசார் கூட அவர்களுக்கு எங்கிருந்து குண்டுகள் கிடைக்கிறது அதன் பூர்வீகம் போன்ற விஷயங்களை வெளியிடாமல் மறைத்து விடுகின்றனர். மக்களுக்கும் இது பற்றிய விழிபுணர்வே இல்லை . அதை தட்டி கேட்கவோ அதன் காரணத்தை அறியவோ யாருக்கும் பொறுப்பு இல்லை. அரசாங்கம் தான் அதற்கு காரணம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர். அரசோ இது எதிர் கட்சியின் சதி என்று கை காட்டுவதற்கு தயாராக உள்ளது. எப்படியேனும் பாதிக்கப்படுவது மக்கள் தான்.அவ்வப்போது குண்டுகள் கண்டு பிடிக்கபட்டாலும் மக்களுக்கு இன்னும் அரசின் மீது நம்பிக்கை வரவில்லை . இது கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல . இது நாட்டின் மிக முக்கிய பிரமுகர்கள் அனைவரூம் சம்பந்தப்பட்ட விஷயம் . தவறு யாரிடம் ?
கண்ணமித்ரன்,பசுபதிபாளையம்.
Monday, July 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
getting in to the public matter mith your faike ID is easy but come and join this world agin with your original identy...............Then i can accept your comments dont be sily,,,,,,,,,,,,,
Post a Comment